fbpx

வந்தாச்சு சூப்பர் நியூஸ்.! TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு TNPSC மூலமாக தேர்வு நடத்தப்பட்டு  அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் பணியமரத்தப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரித்து TNPSC புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு 5,413 ஆக இருந்த  பணியிடங்கள் தற்போது 6151 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 738 இடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் குரூப் 2 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு மே மாதம் மாதம் நடைபெற்றது. ஒன்பது லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வுக்கான முடிவுகள் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியாகியது. இதில் தேர்ச்சி பெற்ற 51 ஆயிரம் பேர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு எழுதினார். இதற்கான முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி 738 பணியிடங்களை அதிகரித்திருப்பது தேர்வர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திருச்சி: தொடர் பைக் கொள்ளை.! 2 பேரை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்.!

Sat Jan 6 , 2024
திருச்சி பகுதியில் தொடர்பாகண திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக தொடர்பாக நான் திருட்டு நடைபெற்று வந்தது. தங்களது வாகனங்களை திருடு கொடுத்த பல்வேறு மக்களும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரும் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை […]

You May Like