fbpx

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. இங்கு மட்டும் தான்..

மாங்கனி திருவிழாவை ஒட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானே அம்மையே என்றழைத்த, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.. அதன்படி நேற்று முன் தினம் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கிய விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது..

விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா இன்று நடைபெற உள்ளது.. மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று (13.07.2022) அரசு, அலுவலகங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

Maha

Next Post

இன்னும் 4 நாட்களுக்கு சூறாவளிக்காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

Wed Jul 13 , 2022
வரும் 16-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் […]
நவ.9இல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! பயங்கர மழை..!! வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

You May Like