ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இன்று, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. ஸ்ரீரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதே போல் இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடப்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
.