fbpx

இன்றே கடைசி நாள்..! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… அஞ்சல் துறையில் வேலை… எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

இந்திய அஞ்சல் துறையில், கிராமின் டக்சேவக்ஸ் கிராமின் டக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்) [கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்)/அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்)/டக் சேவக்ஸ்]காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று தான் இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி.

அஞ்சல் துறையில் காலியாக இருக்கின்ற, 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான தேடல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை என்பது, இணையதளம் மூலமாக மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்ற மூன்றாம் தேதி முதல் இந்த மாதம் 23ஆம் தேதி வரையில், அதாவது, 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு, இன்று ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால், உடனடியாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால், போதும் என்று கூறப்படுகிறது. மேலும், வயது வரம்பு என்பது 18 வயதில் இருந்து, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அத்துடன், மாத ஊதியம் 12000திலிருந்து, 29,380 ரூபாய் வரையில் வழங்கப்படும். நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

காதலராக இருந்தாலும் வீடியோ காலில் பேசாதீர்கள்!… பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் போலீஸ்!… என்ன நடந்தது தெரியுமா?

Wed Aug 23 , 2023
பெண்கள் யாரையும் நம்பி தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களையோ வீடியோக்களையும் எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாம் என்றும் வீடியோ காலில் பேச வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 19 வயது பெண்ணும், சென்னையை சேர்ந்த திலீப்குமார் (22) என்ற வாலிபரும் கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி பின்னர், இருவரும் அவர்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். மேலும், வாட்ஸ் அப் […]

You May Like