fbpx

இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை வெளுத்து வாங்கும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

தமிழகத்தில் இன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பத்தூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, ஈரோடு, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 8-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 9-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

இந்த ஏரிக்கு போனவர்கள் யாரும் திரும்பியதில்லை.. இந்தியாவின் மர்மமான ஏரி பற்றி தெரியுமா..?

Tue Sep 6 , 2022
நாம் அனைவரும் பல ஏரிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்த மர்ம ஏரி பற்றி ஒரு சிலருக்கே தெரிந்திருக்கும்.. இந்த ஏரிக்கு போனவர்கள் யாரும் இதுவரை திரும்பி வந்ததே இல்லையாம்.. இந்த ஏரி இந்தியா மற்றும் மியான்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த ஏரி மர்மமான ஏரி என்று அழைக்கப்படுகிறது.. நவாங் யாங் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.. இரண்டாம் உலகப் போரின்போது, ​​இந்த ஏரிக்கு […]

You May Like