தமிழக காவல் துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த வேண்டும் என டிஜிபி சகேந்திரபாபு கடிதம் எழுதியுள்ள.
அதில், தமிழக அரசின் காவல்துறையில் பெண் காவலர்களுக்கு 780 பணியிடங்கள் மற்றும் ஆண் காவலர்களுக்கு 1,819 பணியிடங்கள் என மொத்தம் 2,599 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
