fbpx

தமிழகமே சோகம்… வணிகர் சங்க தலைவர் மறைவு… இன்றும், நாளையும் முழு கடை அடைப்பு…!

மறைந்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வட மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்கப்பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று சிகிச்சை போல நன்றி அவர் காலமானார். இந்த நிலையில் வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அதே போல மறைந்த வெள்ளையனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வட மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்கப்பேரவை அறிவித்துள்ளது. நாளை தென்மாவட்டங்களில் கடை அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் பேரவை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

English Summary

Traders’ association president passes away… Shop closure today and tomorrow

Vignesh

Next Post

கடல் எல்லையில் அதிகரிக்கும் பலம்!. விமானங்கள், ட்ரோன்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் இந்தியா!. பயத்தில் சீனா!

Wed Sep 11 , 2024
Increasing strength in the sea border!. India buys planes, drones and submarines! China in fear!

You May Like