fbpx

பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் !.. ஊர்ந்து ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன.

சரஸ்வதி பூஜை – ஆயுதபூஜை என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றுடன் விடுமுறை முடிவதால் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்புகின்றார்கள். சென்னை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கார்கள் ,தனியார் பேருந்து , அரசுப் பேருந்து என வாகனங்களில் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விழாக்காலங்களில் விடுமுறை முடிந்ததும் ஒரே நேரத்தில் மக்கள் பயணிப்பதால் , வாகன நெரிசல் ஏற்படுகின்றது. கூடுதலாக பூத்கள் அமைக்கப்பட்ட நிலையிலும் இந்த வாகன நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவாக வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்பதற்காக ’பாஸ்ட் டேக் ’ முறை கொண்டு வரப்பட்டது. இதனால் டோல்கேட்டை கடக்கும் போது தானாக கட்டணம் செலுத்தப்படும். வாகனங்கள் நெரிசல் குறையும் இது எந்த காலக்கட்டத்திலும் உபயோகமாக இருக்க வேண்டும்.

ஆனால் , சென்னை நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இந்த சூழ்நிலை நிலவுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

இன்றே கடைசி நாள்!!! தமிழ்நாடு வனத்துறையில் (TAFCORN) வேலைவாய்ப்பு... உடனே விண்ணப்பியுங்கள்

Wed Oct 5 , 2022
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்ப்போம். தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில்(TAFCORN) Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Computer Programmerல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

You May Like