சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அந்த கேளிக்கை விடுதியில் பணியாற்றிய 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று பேர் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்க கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கேளிக்கை விடுதியின் அருகிலேயே மெட்ரோ சுரங்கப்பாதை ரயில் பணிகள் நடந்து வருவதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மெட்ரோ பணியின் போது நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட அதிர்வை தாங்க முடியாமல் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.