fbpx

#ஈரோடு: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களில் தற்போது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில், நாகை மாவட்டத்தில் வசிக்கும் மின் வாரிய ஊழியரான சிவசங்கரன் என்பவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை மீட்டனர்.

இது குறித்து காவல்துறையிக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எதிர்பாரத விதமாக மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பற்றி எரியும் காட்சிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Baskar

Next Post

அதிர்ச்சி மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 கொடூரர்கள்….! போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!

Sun Jan 22 , 2023
நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது. செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் […]

You May Like