fbpx

சிக்கிய கனிமொழி!… காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Kanimozhi: தூத்துக்குடி அருகே பிரச்சாரத்திற்கு சென்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியில் தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி பிரச்சாரத்திற்கு சென்ற போது, அவரது பிரச்சார வாகனம் மற்றும் கனிமொழியின் பைகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனைக்கு கனிமொழி முழுமையாக ஒத்துழைத்தார். அவரது பிரச்சார வாகனத்தில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. தீவிர சோதனைக்கு பிறகு தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.

Readmore: ”ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கும் திமுக”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

Kokila

Next Post

பெற்றோர்களே உஷார்..!! யாரையும் நம்பாதீங்க..!! கர்ப்பமான 16 வயது சிறுமி..!! நடந்தது என்ன..?

Mon Apr 8 , 2024
பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை மட்டும் கண்காணிப்பது போதாது. யாரை வேலைக்கு அமர்த்துகிறீர்கள் என்பதில் துவங்கி, சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர் என எல்லோரையுமே எளிதில் நம்பிட வேண்டாம். காலம் கெட்டுக் கிடக்கு. அது அண்ணன் முறையாக இருந்தாலும் சரி, சித்தப்பா முறையாக இருந்தாலும் சரி. ஒரு சந்தேக கோட்டோடு நிறுத்தி வையுங்கள். வீட்டு கார் டிரைவரே, 16 வயது பள்ளி மாணவியை தனியே அழைத்துச் சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்து […]

You May Like