fbpx

மூட்டு வலியை குணப்படுத்தும் மஞ்சள்!… எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?…

மூட்டு வலியை கட்டுப்படுத்த மஞ்சள் மிகுந்த பலன் அளிக்கிறது. எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற வலிகளுக்கு மருந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயதுக்கு ஏற்ப முழங்கால் வலி அதிகரிக்கும். அதனால்தான் உங்கள் உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் மூட்டு வலியை கட்டுப்படுத்த உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். மூட்டுவலியை குறைப்பதோடு, அழற்சியை குறைப்பதற்கு உண்டான மிக முக்கியமான வேதிப்பொருளான குர்குமின் என்னும் சத்து மஞ்சளில் நிரம்பியிருக்கிறது. பொதுவாக உணவுக்கு நிறமூட்டியாகவும், நல்ல மனமூட்டியாகவும் இருக்கின்ற மஞ்சளை உட்கொள்வதால் மிகச் சிறப்பான பலன்களை பெற முடியும்.

மூட்டுவலியால் ஏற்படுகின்ற அசௌகரியம் மற்றும் அழற்சி போன்றவை தற்காலிகமானது அல்ல. அவை நீண்ட காலத்திற்கு நமக்கு தொந்தரவை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே, சீரான இடைவெளியில் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.மஞ்சளில் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் உள்ளன. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் ஸ்ட்ரெஸ் அளவுகளை குறைக்கும். குறிப்பாக வயது முதிர்வு அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் பாதிப்பை இதய நோய்க்கு அடிப்படையான காரணம் என்று கருதப்படும் நிலையில், மஞ்சளில் உள்ள குர்குமின் இந்த பாதிப்பை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் பண்பு மஞ்சளுக்கு உள்ளது.

மேலும், நாம் சமைக்கும் சோறு அல்லது காய்கறி மற்றும் சூப் போன்றவற்றின் மீது மஞ்சள் பொடி தூவி வேக வைக்கலாம். மூட்டுவலி பிரச்சினையால் அவதி அடைபவர்கள் டீ-யில் மஞ்சள் சேர்த்து அருந்தலாம். சாலட் அல்லது கூட்டு, பொரியல் வகைகளில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். பாலில் 2 அல்லது 3 பூண்டு பல் தட்டிப்போட்டு, அதனுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம்.

பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட மஞ்சள் பொடிகளை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும், நாமே மஞ்சள் பொடி தயாரித்து உபயோகம் செய்வது சிறப்பாக அமையும். ஏனெனில் ஆலைகளில் மஞ்சள் பொடி தயாரிக்கும்போது அதில் உள்ள குர்குமின் சத்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.ஆகவே, மஞ்சள் கட்டியாக வாங்கி வெயிலில் நன்றாக உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் பொடியில் வண்டு பிடிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இறுக்கமான பாட்டிலில் அதை சேமித்து வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.

Kokila

Next Post

ஆண்களை மட்டும் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் எச்சரிக்கை!... அறிகுறிகள் இதோ!...

Fri Apr 21 , 2023
ஆண்களை மட்டும் பாதிக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயை எப்படி கண்டறிவது இதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்! புரோஸ்டேட் என்பது ஆண்களில் சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய வால்நட் வடிவ சுரப்பியாகும். இந்த சுரப்பியானது விந்தணுக்களுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் கடத்தும் விந்து திரவத்தை உற்பத்தி செய்கிறது. இவற்றின் செயல்பாடுகள் முறையாக நடைபெறாத போது தான் புற்றுநோயின் பாதிப்பு ஆரம்பமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.குறிப்பாக உலகளவில் ஏழு ஆண்களில் ஒருவர் இந்த […]
’

You May Like