fbpx

2-வது பிரசவத்திலும் டுவின்ஸ்!… 500 மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அதிசயம்!… அமெரிக்காவில் ஆச்சரியம்!

அமெரிக்காவில் 2வது பிரசவத்திலும் பெண் ஒருவருக்கு டுவின்ஸ் பெண் குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் இரட்டை குழந்தை பெற்றாலே அதிசயமாக பார்க்கப்படும். இரட்டையர்கள் பிறப்பதில் ஒட்டி பிறப்பது, வெவ்வேறு ஆண்டுகளில் பிறப்பது போன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான சுவாரஸ்ய சம்பவங்களும் நடக்கும். இதுமாதிரி சுவாரஸ்ய சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகளவில் நடப்பதை அவ்வபோது நாம் அறிந்துவருகிறோம். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அடுத்தடுத்த பிரசவங்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரிட்னி மற்றும் ஆல்பா என்ற தம்பதிகள் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தினர். இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், ஆல்பா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து 3வது குழந்தைக்காக காத்திருந்த இந்த தம்பதிக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது என்னவென்றால், ஆல்பாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது மீண்டும் இரட்டை குழந்தைகளே உருவாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கருவில் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒரே நஞ்சு கொடியில் இருப்பதால் பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மிக அரிதாகவே இதுமாதிரியான கர்ப்பன் நடைபெறும் நிலையில், இதன் ஆபத்தை உணர்ந்த மருத்துவர்கள் பெண்ணை முறையாக கவனிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் 24வது வாரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆல்பா. தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அந்த பெண், சி பிரிவு தொழில்நுட்பத்தின் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதையடுத்து தாயும் சேய்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆல்பாவுக்கு முதல் பிரசவத்தில் 2 ஆண் குழந்தைகள் பிறந்தநிலையில், 2வது பிரசவத்தில் இரண்டும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளதால் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், எங்கள் குடும்பம் பெரிதானதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் நான்கு குழந்தைகளையும் நாங்கள் நல்ல முறையில் வளர்த்து படிக்க வைப்போம் என்றும் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 500 மில்லியன்களில் ஒருவருக்கு தான் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை குழந்தை பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Kokila

Next Post

ஹனி வாட்டரில் இவ்வளவு பவர் இருக்கா!... தினமும் காலையில் இப்படி டிரை பண்ணுங்க!

Sun Feb 26 , 2023
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனை(ஹனி) வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து ஒந்த தொகுப்பில் பார்க்கலாம். தேன் இயற்கையான இனிப்பு என்பது மட்டுமன்றி, உடலின் நச்சு நீக்கம், சீரான ரத்த ஓட்டத்துக்கும் உதவக்கூடியது. காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். குழந்தைகளுக்கும் தேன் கலந்த வெந்நீரை பருகக் கொடுத்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா, […]

You May Like