fbpx

சாகசமா பண்றிங்க…..? கதவை மூடாமல் கார் ஓட்டிய கும்பலை கொத்தாக தூக்கிய காவல்துறை…..!

கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியைச் சேர்ந்த சிலர் கோவாவிற்கு தங்களுடைய மாருதி ரிட்ஸ் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர் அப்போது கார் கோவாவின் போர்வோரிம் பகுதியில் சென்று கொண்டு இருந்த சமயத்தில் அவர்கள் சாகசம் என்ற பெயரில் அத்துமீறிய நடந்து கொண்ட செயல் சாலையில் செல்லும் மற்றவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

அதாவது அந்த காரில் மூன்று பேர் சென்ற நிலையில் கார் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கதவை திறந்து அதனை மூடாமல் திறந்து வைத்தபடியே சாலையில் பயணம் செய்துள்ளனர். இந்த காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தவரும், பின் சீட்டில் அமர்ந்திருந்தவரும் கதவை மூடாமல் திறந்து வைத்தபடி அதில் கால் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர் இவர்களுடைய சேட்டையை பின்னால் வந்த சாலை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இது காவல்துறையின் கவனத்திற்கு சென்றுள்ளது.இது குறித்து கோவா காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது காரின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உரிமையாளரின் நண்பரான பகித் ஹமாசா என்பவர்தான் காரை அச்சுறுத்தும் விதத்தில் ஓட்டியிருக்கிறார்.இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Next Post

ஆட்டோவில் சென்றபோது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் தற்கொலை முயற்சி…..!

Wed Jun 21 , 2023
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற சகிநகா பகுதியை சேர்ந்த பஞ்ச ஷீலா(30) இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்து சில வருடங்களாக வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். ஆனால் சமீப காலமாக அது மோதலாக மாறி இருக்கிறது. தீபக் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்ற நிலையில், இருவரின் திருமணத்திற்கு பஞ்சசீலா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தீபக் […]

You May Like