fbpx

இரு மாநில மோதல்..!! வெடித்தது வன்முறை..!! இணைய சேவை துண்டிப்பு..!! 6 பேர் பலி..!! பரபரப்பு

மேகாலயா – அசாம் எல்லையில் போலீஸாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு குவிந்த மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேரும், அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலரும் உயிரிழந்தனர். இது இரு மாநில மோதலாக மாறியுள்ளது. வன்முறையைத் தடுக்க மேகாலயாவில் உள்ள 7 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இரு மாநில மோதல்..!! வெடித்தது வன்முறை..!! இணைய சேவை துண்டிப்பு..!! 6 பேர் பலி..!! பரபரப்பு

அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மேகாலயாவுக்கு வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, மத்திய படை விசாரணை நடத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை மேகாலயா அமைச்சரவைக் குழு நாளை சந்திக்க உள்ளது.

Chella

Next Post

போதைக்கு அடிமையான இளைஞர்...!! குடும்பத்தையே போட்டுத்தள்ளிய கொடூரம்..!! கதிகலங்கிய டெல்லி

Wed Nov 23 , 2022
டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்று குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (42). இவரது மனைவி தர்ஷன் சைனி (40). இவர்களுக்கு கேசவ் என்ற மகனும், ஊர்வசி (22) என்ற மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதைக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி […]
போதைக்கு அடிமையான இளைஞர்...!! குடும்பத்தையே போட்டுத்தள்ளிய கொடூரம்..!! கதிகலங்கிய டெல்லி

You May Like