திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பண்ணை வீடும் உள்ளது. அங்கு குடும்பம் இல்லாததால் பண்ணை வீடு அடிக்கடி பூட்டியே கிடக்கிறது. அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து செல்வார்.
சம்பவத்தன்று இவர்களது வீட்டை 2 பெண்கள் கண்காணித்து வந்தனர். பண்ணை வீட்டின் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் இதனை தூரத்தில் நின்று கணித்துக் கொண்டிருந்தனர். வெளியில் 2 பெண்கள் காவலுக்கு நிற்பதையும், 2 பேர் வீட்டுக்குள் புகுந்ததையும் அவர்கள் பார்த்தார்கள்.
அந்த பெண்களை பிடிக்க ஓடிய இளைஞன் முன் அந்த கும்பல் ஆடைகளை அவிழ்த்து விட்டு அந்த இளைஞனின் கவனத்தை திசை திருப்பி தப்ப முயன்றது. அப்போது, வீட்டின் உரிமையாளர் வரவே, அவர்கள் எச்சரித்து தப்பியோட முயன்றனர். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு அவர்கள் வந்து இவர்களை பிடித்தனர்.
அவர்களை அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து, அங்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வதி, சித்ரா என்பது உறுதியானது. அவர்கள் நான்கு பேர் கொண்ட குழு. மேலும் பகலில் ஒதுக்கப்பட்ட பண்ணை வீடுகளை குறிவைத்து இரவில் திருட்டில் ஈடுபடுவதும் அம்பலமாகியுள்ளது.
சம்பவத்தன்று ஜோத்தாம்பட்டியில் ஆட்கள் இல்லாததால் பகலில் திருட முடிவு செய்து மாட்டிக் கொண்டனர். ஆண்களால் துரத்தப்பட்டால், ஆடையைக் களைந்து ஓடிவிடுவது வழக்கம். அதேபோல் ஜோத்தம்பட்டியிலும் முயற்சி செய்து மாட்டிக் கொண்டுள்ளனர்.