உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் இன்று பதவியேற்கிறார். டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த என்.வி ரமணா .நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு அடுத்தபடியாக மிக மூத்த நீதிபதியாக இருந்து வந்த யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட்டின் 49 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர் 2014 -ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் . இவரது தந்தை யு.ஆர். லலித் டெல்லி உயர் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்தவர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவர் 1983-ல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1985 வரை மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றி வந்த இவர் , 1986 -ஆம் வருடம் டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். 2004- ஆம் வருடம் மூத்த வழக்கறிஞராக சுப்ரீம் கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட இவர் பத்து வருடங்களுக்கு பிறகு நீதிபதியானார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.