fbpx

ரஷ்யா விடுவித்த உக்ரைன் வீரர் புகைப்படம் வெளியீடு… வீரர் பிடிபடும் முன், பின் போட்டோவால் அதிர்ச்சி…

சமீபத்தில் ரஷ்யா விடுவித்த உக்ரைன் நாட்டின் ராணுவ வீரரின் புகைப்படம் பிடிபடும் முன் மற்றும் பின் என குறிப்பிட்டு வெளியிடப்பட்ட போட்டோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் வீரர் ஒருவரை சமீபத்தில் ரஷ்யா சிறைப்பிடித்து வைத்தது. இதில் மைக்கேலோ டியானோவ் என்ற வீரரை சமீபத்தில் ரஷ்யா விடுவித்தது. அவரை மீட்ட உக்ரைன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக அந்த வீரரை ரஷ்யா பிடித்துச் செல்லும் முன் மற்றும் தற்போது உள்ள நிலை குறித்த போட்டோவை வெளியிட்டு.. உக்ரைன் வீரர் மைக்கைலோ டியானோவ்வை ரஷ்யா சமீபத்தில் விடுவித்தது. இவர் அதிர்ஷ்டசாலி , தன் உயிரை எப்படியோ காப்பாற்றிக் கொண்டார். இருந்தாலும் ரஷ்யா நாசிசத்தில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது. ரஷ்யா ஜெனிவா உடன்படிக்கையை இப்படித்தான் கடைப்பிடிக்கின்றது என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் நமக்கே அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

https://twitter.com/DefenceU/status/1573346176396664833?s=20&t=l681DKeggmwBp7RzSC-S8w

பல நாள் முறையான உணவு கொடுக்கப்படாமல் சித்ரவதை செய்ததை நம்மால் பார்க்க முடிகின்றது. இதை பார்த்தவர்கள் டுவிட்டரில் ’’இதயம் நொறுங்குவதுபோல் உள்ளது என கமணெ்ட் செய்து வருகின்றனர்.

Next Post

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை … இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒளிபரப்பாகின்றது…

Tue Sep 27 , 2022
நாட்டின் உச்சபச்ச நீதி அமைப்பாக உள்ள உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற நடைமுறைகளை 2018ம் ஆண்டு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி தந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பானது 4 ஆண்டுகள் கழித்து இன்று அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை தொடங்கலாம் என்ற முடிவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி […]

You May Like