fbpx

தேசிய பயிர்க்காப்பீடு…!! Digi Claim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறை அறிமுகம்…!

தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் DigiClaim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும்.

இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு நிதி சார்ந்த ஆதரவு அளிக்கவும் இந்த மின்னணு பணப்பரிமாற்ற முறை பெரிதும் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

எல்லாம் எச்சரிக்கையா இருங்க..‌! பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்..‌‌! வானிலை மையம் தகவல்..‌!

Mon Mar 27 , 2023
வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் […]

You May Like