fbpx

635,000 பேரின் பான் கார்டு தரவுகளை பயன்படுத்தி ரூ. 10,000 கோடிக்கு மேல் மோசடி!! பகீர் சம்பவம்!

கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரூ. 10,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மோசடி கும்பல் இல்லாத கற்பனையான நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் அரசாங்கத்திடமிருந்து உள்ளீட்டுக் கடன் வரியைத் திரும்பப் பெற்றதாகவும், இதனால் ஆரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாசின் ஷேக் (38), ஆகாஷ் சைனி(21), அதுல் செங்கர்(23), அவ்னி(25), தீபக் முர்ஜானி(48), அவரது மனைவி வினிதா(45),  விஷால்( 20) மற்றும் ராஜீவ்(38) ஆகிய 8 பேர் கொண்ட கும்பலை டெல்லி மது விகாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளர். 

Rupa

Next Post

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்!

Fri Jun 2 , 2023
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பிறகும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை. குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட  இங்ளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிது. இதனால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழகத்தில் 15 இடங்களில் இன்று வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக […]

You May Like