உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை அங்கும் இங்கும் தேதி அலைந்த பெற்றோர் போலீசில் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
அந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பாரோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமி விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் கிடந்த நிலையில் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அதன்படி சிறுமி ஒரு இளைஞருடன் பேசிக் கொண்டிருப்பது சிசிடிவி பதிவாகியுள்ளது. அந்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த சிறுமி இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.