உத்திரபிரதேசத்தில் உள்ள மீரட் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் இளைஞருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது.
உடனே அவர் தன் நண்பரின் தோள்களில் கையை போட்டபடி மிகவும் சோர்வாக நடந்து சென்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் அவர் சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தூக்க முயற்சித்தனர்.
ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. பின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த இளைஞர்கள் உதவி கேட்டனர். அவர்களின் உதவியுடன் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
தும்மல் வந்ததை தொடர்ந்து, அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நண்பர்களுடன் சாதாரணமாக நடந்து சென்ற போது தும்மல் வந்தவுடன் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.