fbpx

பரபரப்பு…! செந்தில் பாலாஜியை 15 நாட்கள் விசாரிக்க கோரிய வழக்கு…! இன்று நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில் இன்று தீர்ப்பு.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.

தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு அளிக்க உள்ளது.

Vignesh

Next Post

தமிழகமே...! இனி இதற்கு அனுமதி பெறுவது அவசியம்...! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை...!

Thu Jun 15 , 2023
தமிழகத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு வழங்கப்பட்டு இருந்த முன் அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act, 1946 Central Act XXV […]

You May Like