fbpx

இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, வடதமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, வட தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளை வட தமிழக மாவட்டங்கள்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, விருதுநகர்‌, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 11,12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிககள், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.. எனவே இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை, மீனவர்கள்‌ கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

”ரஜினிகாந்த் கூறியதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” - வைகோ விமர்சனம்

Tue Aug 9 , 2022
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அரசியல் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை. ரஜினிக்கே அவர் சொல்வது புரியவில்லை. அரசியலுக்கு வருவதாக சொன்னார், கட்சிக்காக ஆட்களை சேர்த்தப் பின் அரசியலுக்கு வரவில்லை என்றார். அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று வைகோ தெரிவித்தார். மேலும், ”மதிமுக புத்துணர்ச்சி பெற்று […]

You May Like