fbpx

எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்ல…! நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு…! விஜய் ஆண்டனி அதிரடி முடிவு…!

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் எண்ணும் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தாங்கள் முழு பொறுப்பேற்பதாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் கூறி இருந்தது. இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த எல்லா குளறுபடிகளும் திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கு பாஜகவை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர்தான் காரணம் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானை பழிவாங்கி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

மேலும் இதில், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் இதில் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மீது உள்ள தொழில் போட்டியால் அரசியல் பிரமுகர் உடன் சேர்ந்து இதனை அரங்கேற்றியதாகவும், அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் அந்த தனியார் யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது அறிக்கையில். அதில், “என் மீது அன்பு கொண்ட, என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன், இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி, யூடியூப் சேனல் ஒன்றில், என்னையும் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார்.

அது முற்றிலும் பொய்யே, அந்த யூடியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும், நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாஸ்...! TNPSC நேர்முகத்தேர்வில் புதிய நடைமுறை...! தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு...!

Sat Sep 16 , 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி (A,B,C,D) முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ அரசுப்‌ பணியாளர்களை தேர்வு செய்யும்‌ […]

You May Like