fbpx

12 மணி நேரமாக தொடர்ந்து மேடையில்…..! அசராமல் நின்று ஊக்கத்தொகை வழங்கிய நடிகர் விஜய்…..!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக சென்ற கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது தன்னுடைய பெற்றோர் முன்னிலையில், சுமார் 1000 மாணவ, மாணவியருக்கு தலா 5000 ரூபாய் ஊக்கத்தொகை சான்றிதழ்களை வழங்கி உள்ளார் நடிகர் விஜய்.

இதில் சுமார் 1600 மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கிட்டு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார்.

அதோடு நிகழ்ச்சிகள் பலர் கவிதை பாடியும் பாடல் பாடியும் விஜய் புகழ்ந்தனர். சில மாணவர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் எனவும், தாங்கள் விஜய்க்கு ஆதரவு வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

காலை 11 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு இரவு 11 20 மணி வரையில் நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிமிடம் முதலே மேடையில் நின்றவாறு எல்லோருக்கும் நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Next Post

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு...! போலி விலை பட்டியல் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர் அதிரடி கைது...!

Sun Jun 18 , 2023
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை தகவலின் பேரில் 15ஆம் தேதி சில நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இயக்குநரகம் சோதனை மேற்கொண்டது. அதில் நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சோதனையில், ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான OTP களைப் பெறப் பயன்படுத்தப்படும் பல மொபைல்போன்கள், இ-வே பில்கள், போலி பில்கள், பல்வேறு […]

You May Like