fbpx

Vijay TV | ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகல்..!! அவரே வெளியிட்ட அறிவிப்பு..!!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருகிறது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’. சமையல் கொஞ்சம், நகைச்சுவை நிறைய என இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதே இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைக்க முக்கியக் காரணம். இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்து இன்னும் சில வாரங்களில் 5-வது சீசன் தொடங்க இருக்கிறது.

முதல் சீசனில் இருந்து செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் ஜட்ஜாக இருந்தனர். நிகழ்ச்சி கலகலப்பாகச் செல்ல இவர்களும் முக்கியக் காரணம். அப்படி இருக்கும்போது, வரவிருக்கும் 5-வது சீசனில் தான் பங்கேற்கப் போவதில்லை என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‘இந்த அருமையான நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக நான் பிரேக் எடுக்கிறேன். கடந்த 24 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் நான் ஒரு பங்காக இருக்கிறேன். அவர்களுக்கும் நிகழ்ச்சி டீமுக்கும் நன்றி. எனக்கு வரக்கூடிய புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்கிறேன். இது ஒரு கடினமான முடிவு. ஆனால், இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் வெங்கடேஷ் பட் போட்டியாளர்களை அடிப்பது, பொருட்களைத் தூக்கி எறிவதும் முன்பு பொதுவெளியில் சர்ச்சையானது நினைவிருக்கலாம். இந்த காரணத்திற்காகவே அவர் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக வரக்கூடிய சீசனில் நடிகர் சுரேஷ் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்தவர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மட்டுமல்லாது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் போட்டியாளரான சுரேஷூம் இந்தப் பரிசீலனைப் பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Chef Venkatesh Bhat Quit Cook With Comali Season 5 show

Read More : Edappadi Palaniswami | அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது..!! இதுதான் எங்கள் முழக்கம்..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

Chella

Next Post

BJP| சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரம்.! பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கைது.!

Sat Feb 24 , 2024
மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய BJP பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

You May Like