fbpx

பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்..!! மருத்துவமனை அறிக்கை..!! தொண்டர்கள் மகிழ்ச்சி..!!

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். உடல்நலக்குறைவு காரணமாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக நேரடி களத்தில் இருந்து ஒதுங்க, தேமுதிகவும் ஓட்டு அரசியலில் பின்தங்கி இருக்கிறது.

நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சனை உள்ள விஜயகாந்த், கடந்த 18ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை, அவருக்கு அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றும், அதன் பிறகு விஜயாகாந்த் வீடு திரும்புவார் என குறிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து தான் பல சந்தேகத்திற்கு செய்திகள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாக துவங்கின.

அதனை தெளிவுப்படுத்த பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தான் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Mon Dec 11 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் வெளியாகக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5, 446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதனை 55 ஆயிரத்து 41 […]

You May Like