fbpx

விநாயகர் சதுர்த்தி வங்கி விடுமுறை : இந்த நகரங்களில் இன்று வங்கிகள் இயங்காது..

விநாயகr சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பல வங்கிக் கிளைகள் இன்று மூடப்பட்டுள்ளன. எனவே உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு முன், விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும் மாநிலங்களின் பட்டியலையும், எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதையும் நீங்கள் கண்டிப்பாகக் குறித்துக்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வங்கி செயல்பாடுகள் மூடப்படும் மாநிலங்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறிப்பிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வங்கிகள் மூடப்படும் நகரங்களின் பட்டியல் இதோ.

  • அகமதாபாத்
  • பேலாபூர்
  • பெங்களூரு
  • புவனேஸ்வர்
  • சென்னை
  • ஹைதராபாத்
  • மும்பை
  • நாக்பூர்
  • பனாஜி

இருப்பினும், வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் மற்றும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பைப் பொறுத்தது.. ஒரு சில பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சில பண்டிகைகள் உள்ளூர் அளவில் மட்டும் கொண்டாடப்படுகின்றன.. எனவே அந்தந்த பண்டிகைகளை பொறுத்து வங்கி விடுமுறைகள் மாறுபடும்..

Maha

Next Post

இரங்கல் செய்தி..!! புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மாரடைப்பால் மரணம்..!!

Wed Aug 31 , 2022
கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா வெனிசூலாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60. உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளியாவார். சேகுவேராவுக்கு இரண்டு மகன்கள். இவரில் இளையவர் கமிலோ சேகுவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்றபோது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி […]
இரங்கல் செய்தி..!! புரட்சியாளர் சேகுவேராவின் மகன் மாரடைப்பால் மரணம்..!!

You May Like