fbpx

Viral Video..!! ’காதல்’ மன்றமான நாடாளுமன்றம்..!! பெண் எம்பியிடம் காதலை தெரிவித்த சுவாரஸ்ய சம்பவம்..!!

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற அமர்வின் போது, எம்பி ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டார். தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் குழந்தைகள் தூங்க சென்றதும், ரொமாண்ட்டிக்காக அதை கொண்டு வந்து தருகிறேன் என்றும் நாதன் லாம்பர்ட் கூறினார்.

இதையடுத்து, நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி எம்பியின் காதலை உற்சாகப்படுத்தினார்கள். இதனால் நாடாளுமன்றமே சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து நாதன், லம்பேர்ட்டின் காதலை, அந்த பெண் எம்பி.யான நோவா எர்லிச்சும் ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய விக்டோரியன் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் எம்பி. நாதன், வனம், எரிசக்தி காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியவரும்கூட, எப்படியாவது ஒருநாள் தன்னுடைய காதலை வித்தியாசமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்துள்ளாராம்.

ஆனால், இந்த கொரோனா நடுவில் வந்துவிடவும், எல்லா பிளான்களுமே சொதப்பலாகிவிட்டது. அதனால், கொரோனா முடிந்ததுமே இப்போது நாடாளுமன்றம் துவங்கி நடந்து வருவதால், இந்த முறை எப்படியாவது தன்னுடைய காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாராம். இத்தனைக்கும், எம்பி நாதனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொள்ள அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Chella

Next Post

”குட் நியூஸ்”..!! ”மக்களே இனி கவலை வேண்டாம்”..!! மின்சார வாரியம் போட்ட அதிரடி உத்தரவு..!!

Fri Mar 10 , 2023
சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெருநகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் கோடை காலம் முடிவடையும் வரை சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் கூடுதல் உயரழுத்த மின் விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, அதிகளவில் மின்தடை ஏற்படும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை தெற்கு, வடக்கு, […]
புதுசா வீடு வாங்கப் போறீங்களா..? மின் இணைப்பு குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

You May Like