fbpx

Viral Video | ஆம்புலன்ஸ் இல்லாததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள்..!! உ.பி.யில் அவலம்..!!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த சகோதரியின் உடலை 5 கி.மீ தூரம் வரை சகோதர்கள் தோளில் சுமந்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்வசதி இன்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் ஷிவானி என்ற இளம்பெண் டைபெய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஷிவானியை அவரது சகோதர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷிவானி உயிரிழந்தார். இதனால் ஷிவானியின் சகோதரர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உயிரிழந்த ஷிவானியின் உடலை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் அவரது சகோதர்கள் இருவரும் ஷிவானியின் உடலை மாறி மாறி தோளில் சுமந்து சென்றனர்.

அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், தண்டவாளம் அமைந்திருக்கும் பாதை வழியாக சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தங்களது வீட்டிற்கு தனது சகோதரியின் உடலை சுமந்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : கால்பந்தாட்ட வீரரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி..!! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!

English Summary

Shivani was suffering from typhoid. Due to the floods, she could not be taken to a good doctor in the city. She died on the way. Her brother is carrying his sister’s dead body on his shoulder…

Chella

Next Post

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

Sat Jul 13 , 2024
DMK candidate Aniyur Siva is leading in Vikravandi by-election vote count.

You May Like