fbpx

அர்மீனியா – அஜர்பைஜான் நாடுகளிடையே கடும் மோதல் …எல்லைபிரச்சனையில் 71 பேர் பலி ….

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 71 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அர்மீனியா – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் போர் தொடங்கியது. ஆறு வாரங்கள் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் நாக்ரோனா – கராபாக் ஆகிய மாகாண்ம கைப்பற்றப்பட்டது. இதில் சுமார் 6000த்துக்கு அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

ரஷ்யா இந்த இருநாடுகளின் போரை 2021ன் தொடக்கத்தில் முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் அடிக்கடி இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை வலுத்தது. கடந்த சில நாட்களாக போர் முற்றி வருகின்றது. பாதுகாப்பு பணியில் இருந்த இரு நாட்டு வீரர்களும் தொடர்ந்து மோதலில் உள்ளனர். இதுவரை 71 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு.. பீரங்கி குண்டுகள் வீசித் தாக்குதல் தொடர்ந்து வருகின்றது. ராணுவத்தினர் உச்சகட்டமாக நடந்த தாக்குதலில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Next Post

#Result; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்... இன்று மதியம் 12 மணிக்கு...! எப்படி பார்ப்பது...?

Fri Sep 16 , 2022
10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்களது […]

You May Like