fbpx

வடமாநிலங்களில் கனமழை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை……!

சென்ற சில தினங்களாகவே வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் சூழ்நிலையில், கனமழை மிகவும் கடுமையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த விதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன் அடிப்படையில், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல்…..! அரசு பள்ளியின் படித்த சேலம் மாணவி கிருத்திகா முதலிடம்….!

Sun Jul 16 , 2023
தமிழகத்தில் இருக்கின்ற அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் போன்ற இடங்களுக்கு இணையதளங்களின் மூலமாக விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக இதற்கு விண்ணப்பம் செய்தனர். […]

You May Like