நியூசிலாந்தில் இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக கொடிய நோய்களில் ஒன்றான கேன்சர் அறிகுறிகளாக இருந்த அதிர்ச்சி ம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹார்மோன்களுடன் தொடர்புடையவையாக இருப்பதாலும், மாசு மற்றும் அழுக்கு காரணமாக சில சமயங்களில் முகத்தில் பருக்கள் ஏற்படும்.பொதுவாக இப்படி ஏற்படும் பருக்கள் சில நாட்களில் அதிகபட்சம் சில வாரங்களில் தானாகச் சரியாகிவிடும். இதனால் பெரும்பாலானோர் பருக்களைப் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த நிலையில், நியூசிலாந்தை சேர்ந்த 52 வயதான மைக்கேல் டேவிஸ் என்பவருக்குப் பரு மிகவும் கொடிய ஒரு புற்றுநோயின் அறிகுறியாக இருந்துள்ளது. அந்த சின்ன பரு அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு மூக்கில் சிவப்பு நிறத்தில் ஒரு சின்ன பரு ஏற்பட்டுள்ளது. அது சாதாரண பரு என்றே அவர் முதலில் நினைத்துள்ளார். இருப்பினும், அதைச் சுற்றி அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டுகொள்ளாமல் இருந்த மைக்கேல் டேவிஸ் அந்த இடத்தில் இரத்தம் வருவது நிற்கவில்லை, இந்த காரணத்தால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு (carcinoma) கார்சினோமா எனும் தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மைக்கேல் டேவிஸ் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனையடுத்து, புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அவர் வந்துவிட்டதால் விரைவில் குணமடைந்தார். இருப்பினும், ஒருமுறை தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, அவருக்கு மீண்டும் நோயை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வகை புற்றுநோய் முதலில் அடித்தள செல்களில் இருந்து தொடங்குகிறது. பழைய செல்கள் இறக்கும் போது அவை புதிய தோல் செல்களை உருவாக்குகின்றன. ஆனால் இந்த உயிரணுக்களின் புற்றுநோயை சூரிய ஒளியின் வெளிப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முகம் மற்றும் கழுத்து போன்ற இடங்கள் வெயிலில் படும்போது ஒரு வித எரிச்சல் உணர்வை நீங்கள் உணர்வீர்கள். அந்த இடத்தில் செதில் திட்டுகள் போல ஏற்படும். தோலில் வெள்ளை அல்லது பழுப்பு நிற கட்டி செதில் திட்டுகள் போல ஏற்படும். பளபளப்பான தோல் நிறமுள்ள பருக்கள் வரும் வெள்ளை, மெழுகு போன்ற வடு போன்ற புண்கள் வரும்