நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டுமே திருப்பி அனுப்பப்பட்டன, இது தொடர்பாக துஷ்யந்த் மீது புகார் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக பணத்தை தருவதாக ராம் குமார் வாக்குறுதி அளித்துள்ளார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/ram-kumar-sivaji.jpg)
ஆனால் அவரும் கூறியபடி பணத்தை திருப்பி தராத காரணத்தால் அவர்கள் மீது வழக்கு பதியபட்டது. இந்த வழக்கை சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.