பாதுகாப்பு தேடி நம்பிக்கையுடன் அணுக வேண்டிய உறவே ஒரு சிறுமிக்கு அச்சமாக மாறியிருக்கிறது. 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலத்திற்காக ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் […]

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. வழக்கு அவசரமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும், வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வழக்கமான விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற என். இளையராஜாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், இளையராஜாவின் எம்.எல்.ஏ. பதவிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஊத்தங்கரை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட இளையராஜா வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த […]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாரில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சைபர் கிரைம் போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அறிக்கையை அடுத்த நாளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த […]

கடந்த 2025ஆம் ஆண்டு கரூரில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதையும் உலுக்கிய இச்சம்பவம் குறித்து தற்போது சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான பணி நியமன ஆணைகளை சமீபத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் […]

சில நாட்களுக்கு முன்பு, 18 மாத பிஞ்சு குழந்தையை ஒருவர் மீண்டும் மீண்டும் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனத்தையும் வேதனையையும் கிளப்பியது. இந்நிலையில், அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு நீதிமன்றம் தக்க தண்டனையை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து, நீதி கிடைத்துள்ளதாக […]

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவருக்கு 39 வயதான புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த இவருக்கும், இவரது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த 39 வயதான செல்வமணி என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் என்பவரின் மகனான செல்வமணி, […]

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மதியம் ஒரு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் காயமடைந்தனர்.. குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. உள்ளூர் ஊடகங்கள் வாகனத்திற்குள் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன, ஆனால் அது குறித்து போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. குண்டுவெடிப்பு நடந்த நீதிமன்ற வளாகம் […]

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக பாஜக கவுன்சிலர் தாக்கல் செய்த தனிநபர் புகார் மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது குறித்து சென்னை மாநகராட்சி கவுன்சிலர் […]