ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பரவலாக உள்ள நிலையில், இதுகுறித்து இந்திய தனித்துவ ஆதார் அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது.. அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது… ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன… முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில், மத்திய ஆதார் ஆணையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையில் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளதாலும், அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதாலும், அதில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய ஆதார் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதில், ஏதேனும் விவரங்கள் மாற்றம் இருப்பின் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் இ- சேவை மையம் வாயிலாக உடனுக்குடன் அதனை அப்டேட் செய்து கொள்ள வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன..
இதில், விவரங்களை மாற்ற வேண்டும் என்றால், கட்டாயம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் தேவை. இது இருந்தால் போதும், நீங்களாகவே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே அப்டேட் செய்யலாம். மற்றொரு முக்கியமான தகவல் ஆதார் அட்டை பற்றி UIDAI வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல், ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை மாற்ற அரசு ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்ற முடியும் என்றும் UIDAI எனப்படும் மத்திய ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.