fbpx

அந்த ரயிலில் இந்த கருவி மட்டும் இருந்திருந்தால்…..! விபத்தை தவிர்த்து இருக்கலாம் ரயில்வே துறை உறுதி….!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது. பெங்களூர் ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோரமண்டல் ரயிலில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு கருவி மட்டும் இருந்திருந்தால் ஓடிஸா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை உறுதி செய்து இருக்கிறது. ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்ததாவது, ஒடிசாவில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவாச் என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகம், சிக்னலை கடந்து ரயில் சென்றால் கவாஜ் கருவி மூலமாக எச்சரிக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் தாமாகவே பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்படும். இதுதான் கவாச் கருவியின் சிறப்பம்சமாகும். கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த கருவி ரயில் பாதுகாப்பு காரணமாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதோடு, இந்த கருவி தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாகித் கோக்கலே ரயில் வழித்தடங்களில் இரண்டு சதவீதம் மட்டுமே இந்த கருவி பொருத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Next Post

ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன்…..! முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை….!

Sat Jun 3 , 2023
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் இருக்கின்ற பகநாகா என்ற பகுதியில் நேற்று இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவம் காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்து இருக்கிறது. 900 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணி அளவில் ஒரிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழுவுடன் காணொளி மூலமாக […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like