fbpx

உள்ளாட்சித்துறை காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்..? அமைச்சர் கே.என்.நேரு பதில்..!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் 75 சதவீதம் மக்களுக்கு பணியாற்றும் துறையாக நகராட்சி நிர்வாகத் துறை உள்ளது என்று குறிப்பிட்டார்.

உள்ளாட்சித்துறை காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்..? அமைச்சர் கே.என்.நேரு பதில்..!

கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 1,000 கோடி ரூபாயும், நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.400 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.876 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தமிழ்நாட்டில் சாலைகள், வடிகால், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்மயானங்கள் அமைக்க கடந்த ஆண்டு 75 இடங்களும், நடப்பாண்டில் 7 இடங்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

கல்லூரிக்கு செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்த மாணவி.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Fri Jul 22 , 2022
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா (20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இவரை, மாரிமுத்து தினந்தோறும் திருக்கச்சூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை தனது பைக்கில் அழைத்துச் […]

You May Like