fbpx

யாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் மோடி..? பிரதமரின் அழைப்புக்காக காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை பாஜக தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக வெளிப்படையாகவே அறிவித்தார். இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும் சட்ட ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் ஓ.பன்னீர்செல்வம் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். இதனால், அதிமுக அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

யாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் மோடி..? பிரதமரின் அழைப்புக்காக காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

இந்நிலையில், வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். அன்றைய தினம் புதுச்சேரி மாநிலத்தில் அரசு விழாவில் பங்கேற்கும் மோடி மறுநாள் மாலையில் (ஜூலை 28) நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் சென்னையில் தங்கி இருக்கும் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருக்கின்றனர். இருவரிடமும் மோடி நல்ல நட்புடன் இருக்கிறார். ஏற்கனவே சென்னை வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் விமான நிலையத்தில் சந்தித்து கட்சி பிரச்சனைகள் பற்றி விவாதித்து சில ஆலோசனைகள் கூறியிருந்தார்.

யாரை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார் மோடி..? பிரதமரின் அழைப்புக்காக காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ்..!

இப்போது எடப்பாடி பழனிசாமி தனக்கு இருக்கும் ஆதரவை சுட்டிக்காட்டி பாஜகவின் ஆதரவை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதால் அதிமுக சார்பில் அவரை சந்திப்பதை மோடி தவிர்க்க வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இது தொடர்பாக டெல்லியில் காய்கள் நகர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக பாஜகவை பொறுத்தவரை அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் தனித்தனியாக இருப்பது கூட்டணி வெற்றியை பாதிக்கும். எனவே, அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை காண வேண்டும் என்று விரும்புகிறது. அதனால் தான் அண்ணாமலையும் இருவரிடமும் ஒரே நிலைப்பாட்டை கடைபிடிக்கிறார்.

Chella

Next Post

ஊழியர்களுக்கு குட்நியூஸ்..! வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை.. புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு..

Wed Jul 20 , 2022
நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான (WFH) புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.. மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை ஒரு சிறப்பு பொருளாதார மண்டல பிரிவில் அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் (SEZs) நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான வீட்டில் இருந்து வேலை செய்யும் […]

You May Like