2024 மக்களவை தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருப்பார் என அமித் ஷா அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாட்னாவில் நடைபெற்ற 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “2024ல் பாஜக-ஜேடியு இணைந்து தேர்தலில் போட்டியிடும், நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்.” என்று தெரிவித்தார்.. 2024 லோக்சபா தேர்தலுக்கு, பிரதமர் வேட்பாளர்கள் பற்றிய விவாதம் பரபரப்பான பேசு பொருளாக இருந்து வருகிறது.. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும், புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்தும் அடிக்கடி ஊகங்கள் நிலவி வருகின்றன.
இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான அமித் ஷா இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
தொடர்ந்து பேசிய அமித்ஷா “75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு, மோடி அரசில் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் அமைச்சர் பதவிகளில் அதிகளவில் பதவியேற்றுள்ளனர். நாட்டில் தேசபக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று ஷா கூறினார். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, மூன்று நாட்களுக்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேசியக் கொடி ஏற்றப்படும் என்பதை பாஜகவினர் உறுதி செய்ய வேண்டும்..” என்று தெரிவித்தார்..