fbpx

காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி…..! ஆத்திரம் தீராததால் என்ன செய்தார் தெரியுமா…..?

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில், அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார் சந்தானம். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்த நிலையில் தான் சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்படும் தகராறு இரண்டு குடும்பத்தினரும் சமாதானம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இத்தகைய நிலையில் வழக்கம்போல மறுபடியும் சந்தானத்திற்கும், வேண்டாவிற்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட மனைவி உறங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மி கல்லை போட்டுள்ளார். அதோடு நெறி குறையாததால் கத்தியால் சந்தானத்தின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பு உள்ளிட்டவற்றை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வேண்டா. இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பெரித பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…

Sat Jun 10 , 2023
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Fitter Apprentice & Mechanic Motor Vehicle பணிகளுக்கு என மொத்தம் பத்து காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படக்கூடிய பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.7,000 முதல் ரூ. 8,050 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் […]

You May Like