fbpx

நண்பனால் பிரிந்துபோன மனைவி..!! ஆத்திரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்த பயங்கரம்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4), யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல், வசந்த் நேற்று மாலையும் 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், இரவு நீண்ட நேரம் ஆகியும், வசந்த் மற்றும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, வசந்தின் செல்போனுக்கு அழைத்துள்ளார் யோகராஜ். ஆனால், செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயந்துபோன, யோகராஜ் உடனடியாக ஆம்பூர் கிராமிய போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது, காணாமல் போன 2 குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடியை அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோவிலின் பின்புறம் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ”யோகராஜ்க்கு வசந்த் 14,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். அதை திருப்பிக் கேட்ட போது யோகராஜ் தர மறுத்து வந்துள்ளார். இதனால் வசந்த்துக்கும் அவர் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அந்த ஆத்திரத்தில் யோகராஜின் குழந்தைகளை வசந்த் கொலை செய்துள்ளார்” என தெரியவந்துள்ளது.

Read More : ரயில்வே பணிபுரிய ஆசையா..? கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Due to this, Vasant and his wife had a dispute and both of them separated. It has been revealed that Vasant killed Yogaraj’s children in that rage.

Chella

Next Post

திருப்பதிக்கு பெயர் போன 'லட்டு' உருவான கதை..!! இதற்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கா?

Fri Sep 20 , 2024
In this post we will see how Tirupati ladtu was prepared in the early days and what are its features.

You May Like