fbpx

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவர் முதலில் கைதாகி சிறையில் இருந்த போதிலும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்ந்தார். அவர் அமைச்சராக தொடர்வதே அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.

இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார். ஜாமீன் கோரியும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இரண்டு முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதாகவும் இதனால் மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் கூடாது என்றும் இதை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துள்ளது என்றும் தெரிவித்தது. மேலும், மருத்துவ காரணங்களால் இடைக்கால ஜாமீன் வழங்குவது ஆதாரத்தைக் கலைக்கக் காரணமாக அமைந்துவிடும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே பல கைதிகள் 2, 3 ஆண்டுகள் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளதாகவும் அவ்வளவு ஏன் வழக்கு கூட விசாரணைக்கு வராமல் பலர் சிறையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இடைக்கால ஜாமீன் பற்றி உடனே முடிவு எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கை இன்று விசாரிப்பதாகக் கூறினர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Read More : ’நல்லவேளை இப்படத்துக்கு நிர்வாணம்னு டைட்டில் வைக்கல’..!! ’அவரு ஆம்பளையே இல்ல’..!! கண்கலங்கிய கூல் சுரேஷ்..!!

Chella

Next Post

’அது சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல’..!! பகிரங்க மன்னிப்பு கேட்ட யூடியூப் நிறுவனம்..!!

Thu May 16 , 2024
பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சவுக்கு சங்கரின் வீடியோவை ஒளிபரப்பியது தொடர்பாக அவரது யூடியூப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சவுக்கு சங்கர் மீது மொத்தம் […]

You May Like