fbpx

கடற்கரையில் காதலிக்கு நேர்ந்த விபரீதம்; காப்பாற்றாமல் காதலன் செய்த காரியம்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் குறித்து இருவரின் குடும்பத்திற்கும் தெரியவந்ததை அடுத்து, இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்ய பனிந்திரா முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பனித்ரா தனது காதலியை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வரும்படி கூறியுள்ளார். அதன் படி, அவரது காதலியும் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளார்.

மகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மச்சிலி பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இளம்பண்ணை தேடி வந்தனர். இந்நிலையில், கோபால பட்டினத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தனது காதலியுடன் தங்கி இருந்த பனிந்திரா, தனது காதலியை அழைத்துக்கொண்டு அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உயரமான இடத்தில் அமர்ந்து ராட்சத அலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் இருந்துள்ளது.

இந்நிலையில், இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்து, பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். அலைகள் அதிகமாக இருந்ததால், அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியதால் பயந்து போன பனிந்திரா, தனது காதலியை காப்பாற்றாமல் அங்கிருந்து ஓடிவிட்டார். ஆனால் பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இந்நிலையில், அவர் பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்துள்ளார். பின்னர் அதிகாலையில் மீன் பிடிக்க வந்த மீனவர்கள், இளம்பெண்ணின் சத்தம் கேட்டு, அவரை மீட்டனர்.

இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

மேலும் அந்த இளம்பெண், கடலை பார்த்துக் கொண்டிருந்த போது, தான் தவறி விழுந்து விட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். காதலியை தவிக்க விட்டு தப்பி ஓடிய பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Maha

Next Post

வான்வழி தாக்குதலில் உருகுலைந்த காசா!… 11 ஐ.நா. ஊழியர்கள், 30 மாணவர்கள் பலி!… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

Thu Oct 12 , 2023
காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் 11 பேர், 30 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலின் காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தினர். இதையடுத்து […]

You May Like