fbpx

“செம்ம பக்கா மாஸ்”! செக்ஸ் டாய் ஆன்லைனில் ஆர்டர் செய்து சிக்கலில் மாட்டிய பெண்! விவகாரமான வழக்கை விவரமாக தட்டி தூக்கிய வழக்கறிஞர்!

வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக செக்ஸ் டாய் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அந்தப் பொருளை கஸ்டம்ஸில் பிடித்து வைத்ததோடு அவருக்கு அகைன்ஸ்ட் பப்ளிக் மொரலிட்டி நோட்டிஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கை பல வழக்கறிஞர்களும் கையிலெடுக்க தயங்கிய நேரத்தில் இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி இந்த வழக்கில் அவருக்கு வெற்றியையும் தேடி கொடுத்திருக்கிறார். இவருக்கு பல்வேறு விதமான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக செக்ஸ் டாய் ஆர்டர் செய்திருக்கிறார். இந்தப் பொருள் விமானம் மூலமாக வந்திரங்கியபோது கஸ்டம் அதிகாரிகள் அந்த பொருளை கைப்பற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை ஆர்டர் செய்த பெண்ணுக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பினர். ஒரு பெண் என்பதால் இவ்வாறு நடத்தப்பட்டாரா? அல்லது கஸ்டம்ஸின் வழக்கமே இதுதானா? என தெரியாமல் அந்த பெண் குழம்பி போய் இருக்கிறார்.

வழக்கை சந்திக்க அவர் தயாராக இருந்த போதிலும் இந்த வழக்கில் அவர் சார்பாக ஆஜராகி வாதாடுவதற்கு எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை. இந்நிலையில் சென்னையைச் சார்ந்த திலகவதி திலோ என்பவர் அந்தப் பெண் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகி செக்ஸுவல் பிரைவசிக்கும் பப்ளிக் மொரலிட்டிக்கும் இடையில் என்ன சம்பந்தம்? என்ற முறையில் இந்த வழக்கை அணுகி மனுதாரரை வெற்றி பெறச் செய்திருக்கிறார், குறிப்பாக சுங்கத்துறையின் சட்டத்தின்படி பப்ளிக் மொரலிட்டியில் செக்ஸ் டாய் பற்றிய எந்த விளக்கங்களும் இல்லை என சில வழக்குகளை உதாரணமாக காட்டிய அவர் செக்ஸ் டாய் என்பது ஆபாசம் இல்லை எனவும் அது ஒருவரின் தனிப்பட்ட பாலியல் தேர்வு என்று கூறி வாதாடி இருக்கிறார். இதன் மூலம் அந்த பெண்ணிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு அவர் ஆர்டர் செய்த செக்ஸ் டாய் அவரிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய இளம் வழக்கறிஞரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

Baskar

Next Post

நண்பனின் அக்காவுடன் அடிக்கடி உல்லாசம்..!! கண்டித்த நண்பனை கத்தியால் குத்தி சாய்த்த கொடூரம்..!!

Wed Mar 22 , 2023
கோவை மாவட்டம் வேடப்பட்டி நம்பியழகம் பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). இவரது நண்பரான மதன்ராஜ்(32) என்பவருக்கும் ஜெகன்ராஜ் அக்காவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால், ஜெகன்ராஜுக்கும் மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஜெகன்ராஜ் குடிபோதையில் மதன்ராஜ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ஜெகன்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரம் அடங்காததால் ஜெகன்ராஜை கத்தியை […]

You May Like