fbpx

ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி ஒன்றரை வருடமாக 40 வயது பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞர்…..!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அசோகா கார்டன் பகுதியில் சென்ற ஒன்றரை வருடங்களாக 40 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை காட்டி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் சமீபத்தில் அந்த பெண்ணின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்தப் பெண்ணின் கணவருக்கு அனுப்பியதை தொடர்ந்து, இந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ஆம்பலமாகியிருக்கிறது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அசோகா தன் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இது குறித்து பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு துணிக்கடையை நடத்தி வந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவருடைய துணி கடைக்கு அசோகா கார்டனில் இருந்து விஜய் பால் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். பாதிக்கப்பட்ட பெண் அவரிடம் அசோகா கார்டனில் ஒரு நிலத்தை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் விஜய் அந்த பெண்ணை அசோகா கார்டனில் இருக்கின்ற ஒரு நிலத்தை காட்டுவதாக தெரிவித்து ஏமாற்றி தன்னுடைய வாடகை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

அங்கு வைத்து அந்த பெண்ணை விஜய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை வீடியோ பதிவும் செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் அந்தப் பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவர்களை அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.அதன் பிறகு இதையே காரணமாக தெரிவித்து பிளாக்மெயில் செய்து பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

சமூகத்தில் விஜய் அந்த பெண்ணின் கணவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பிய போது விஷயம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, குடும்பத்தினர் தரப்பில் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அந்த வழக்கில் மேலதிகாரிகளின் விசாரணை இடம் பெற்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனி உரிமை பாதுகாக்க அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Next Post

குடித்துவிட்டு ரகளை செய்த தந்தையை உறவினருடன் சேர்ந்து கொலை செய்த மகன்….!

Mon Jun 12 , 2023
சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (51). இவருடைய மனைவி லதா (44), மகன் விக்னேஷ்(24) உள்ளிட்டவருடன் வசித்து வந்தார். சுகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி இருந்தார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், கடந்த 9ம் தேதி அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் சுகுமார் மயங்கிய நிலையில் […]

You May Like