fbpx

உடலுறவுக்கு ஆசைப்பட்ட காதலன்; காதலனின் “அந்த” உறுப்பை, துண்டாக வெட்டி எடுத்து, காதலி கொடுத்த சர்ப்ரைஸ்..

மேற்குவங்க மாநிலம், ஹௌராவை சேர்ந்தவர் அப்துர் ரகுமான். இவர், சௌமியா கட்டூன் என்ற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட அப்துர் ரகுமான் முயற்சி செய்துள்ளார். அப்துர் ரகுமான் இதே போன்று பல முறை செய்துள்ளார். ஒரு கட்டத்தில், தனது காதலனின் செயலால் சௌமியா கடும் கோவம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர் தனது காதலனை தனியாக வரும்படி கூறியுள்ளார். இதனால் அப்துர் ரகுமான், ஆசையாக சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றதும், தனது காதலனை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவரது அந்தரங்க உறுப்பை துண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் சௌமியா கட்டூன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அப்துர் ரகுமானை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 6 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சௌமியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது காதலன் திருமணம் செய்து கொள்ளாமல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மேலும், தனது காதலியை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், சௌமியா தன் வீட்டிற்கு காதலனை வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ஒரு மரத்தில் கட்டி வைத்து காதலனின் கண்களை கட்டி, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read more: தினமும் 5 காளான் போதும்.. புற்று நோய் முதல் இதய நோய் வரை வராமல் தடுக்க முடியும்…

English Summary

woman took revenge on her lover by chopping her lover’s private part

Next Post

அரசு பள்ளி தூய்மை பணியாளர்கள் 30,000 பேருக்கு ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை...!

Wed Dec 11 , 2024
30,000 government school cleaners have not been paid for a year

You May Like