சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் 24 வயதான ரவி சாஹு. இவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஆனால் இறுதியாக அவரது சடலம் காட்டுப் பகுதியில் கிடந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவியின் செல்போன் […]

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்த பெண், மூன்றாவது மாடி பால்கனியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் 34 வயதான லட்சுமி. இவர் வழக்கம் போல், இன்று காலை தனது வீட்டின் […]

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு சில பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த பொருள்களை கொடுப்பதற்கு டெலிவரி பாய் ஒருவர் வந்துள்ளார். பொருட்களை கொடுத்த அவர், தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். இதனால், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணும் டெலிவரி பாயை தனது கழிவறையை பயன்படுத்த அனுமதித்துள்ளார். கழிவறைக்குச் […]

திருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்ற சம்பவங்களே அதிகமாகக் காணப்பட்டன. ஆனால், தற்போது குடும்ப உறவுகளில் பல்வேறு சிக்கல்கள் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. கணவன்-மனைவி இடையேயான மோதல்கள், குடும்ப வன்முறை, தற்கொலைகள், மற்றும் திருமண முறிவுகள் போன்ற சம்பவங்கள் […]

திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து என்பது தற்போது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது. “வேண்டுமென்றால் வைத்துக்கொள், இல்லை என்றால் கொடுத்துவிடு” என்ற அளவிற்கு அது ஒரு எளிதான முடிவாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதே என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலை, தம்பதியரை விவாகரத்து என்ற முடிவுக்கு தள்ளுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களை […]

ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், பயற்சி மருத்துவர் சிகிச்சை அளித்த காரணத்தினால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யோகப்பிரியா பிரசவத்திற்காக, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்கு பின் கர்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின் அடுத்த, இரண்டு தினங்களில் யோகப்பிரியா உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், நீதி […]