fbpx

செம வாய்ப்பு யாரும் மிஸ் பண்ணாதீங்க…! இந்திய ராணுவத்தின் அக்னிவீரர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்திற்கு அக்னிவீரர் பணிக்கு (மகளிர்) விண்ணப்பதாரர்களை சேர்ப்பதற்கான இந்திய ராணுவ அக்னிவீரர் பணிசேரப்பு முகம் வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில் 2022, நவம்பர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. செப்டம்பர் 7, 2022 வரை இதற்கு முன்பதிவு செய்யலாம்.

இணைய வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் 1, 2022க்கு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை அச்செடுத்துக் கொள்ளலாம்.பணிசேர்ப்பு நடைமுறை முழுவதும் தானியங்கியாக, நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சென்னை பணிசேர்ப்பு அலுவலகத்தை 044 25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம்.. பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் வெளியீடு..

Wed Aug 10 , 2022
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகரித்துள்ளது.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. வெளியாகியுள்ளன. அதன்படி, பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு கடந்த ஆண்டை விட சுமார் 26 லட்சம் உயர்ந்துள்ளது.. அதாவது ரூ. […]

You May Like